சென்னையில் கொரோனா நோய்த்தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை
சென்னையில் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை மாநகராட்சி வளாகத்தில் உள்ள அம்மா அரங்கத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தலைமைச் செயலாளர் சண்முகம், சிறப்பு அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்ட பலரும் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். அப்போது, பல முக்கிய அறிவுரைகளை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.முன்னதாக, கடந்த சில வாரங்களுக்கு முன்பும் மாநகராட்சி வளாகத்தில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் கொரோனா நோய்த்தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை #Chennai | #Corona | #CMEdappadiPalaniswami https://t.co/J96ptwd5jk
— Polimer News (@polimernews) June 2, 2020
Comments